பாறசாலா, மார்ச் 24- கோவிட் 19 அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தமிழக அரசு எல்லையில் தனது நிலையை இறுக்கமாக்கியுள்ளது. கேரளா -தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை தேசிய நெடு ஞ்சாலை முழுமையாக மூடப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு, அத்தியாவசிய சேவைகளைச் செய்யும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மற்ற தனியார் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன பயணிகள் திருப்பி அனுப்பப்படு கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு வரும் வாகனங்களை குறுக்கு வழிகளில் உள்ள சோதனைச் சாவடி மூலம் அனுமதிக்கப்படுகின்றன. மாநில எல்லையில் பயணிகளை கேரள சுகாதார செயற்பா ட்டாளர்களும் காவல்துறையினரும் சோதனை நடத்தியும் விழி ப்புணர்வு ஏற்படுத்தியும் அனுப்புகின்றனர். களியக்காவிளை சந்தையை அதிகாரிகள் மூடினர். இரண்டு வியாபார நிறுவ னங்களின் உரிமையாளர்கள் கடைகளை மூடாமல் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பத்மநாப புரம் சாராட்சியரும் காவல்துறையினரும் தலையிட்டு கடை களை மூடச் செய்தனர். எல்லையில் உள்ள ஊரம்பில் செய ல்பட்டு வந்த சந்தையும் மூடப்பட்டது. எல்லைப் பகுதிகளான கண்ணுமாமூடு, களியக்காவிளை, பனச்சமூடு, கோழிவிளை போன்ற பகுதிகளில் தமிழக காவ ல்துறையும் சுகாதாரப் பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டு ள்ளனர். இஞ்சிவிளை, கோழிவிளை, உச்சக்கடை, அமர விளை சோதனை சாவடி போன்ற பகுதிகளில் கேரள காவ ல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தலைமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.