tamilnadu

img

குடிநீர் திட்டப் பணியை விரைந்து முடித்திடுக... சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், அம்ருத் குடிநீர் திட்டப் பணிகளைவிரைவாக முடிக்கவும், சாலைகளை சீரமைக்கவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் திங்களன்று கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் மணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி,மாநகர செயலாளர் மோகன் ஆகியோர் பேசினர். மாநகர குழு உறுப்பினர்கள் மனோகர் ஜஸ்டஸ், அஸீஸ், மீனாட்சி சுந்தரம், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் கடன் வசூல் செய்வதில் ஓராண்டிற்கு காலநீட்டிப்பு வழங்க வேண்டும், பொது சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;