தரங்கம்பாடி, செப்.30- நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் கடந்த 17 ஆண்டு களுக்கும் மேலாக இயங்கி வரும் படகு கட்டும் நிறுவனம் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய படகுகளை அறி முகம் செய்து மீனவ மக்களை கவர்ந்து வருகிறது. தென்னிந்திய மீனவர் சங்கங்களின்(சிப்ஸ்) சம்மேள னத்தின் கீழ் இயங்கும் படகு கட்டும் நிறுவனத்தில் வடி வமைத்து கட்டப்படும் கண்ணாடி நாரிழைப் படகு களுக்கென மீனவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இந்நிலையில் அந்நிறுவனம் கண்ணாடி நாரிழையில் கட்டப்படும் படகுகளில் சூரிய சக்தி மற்றும் பேட்டரியில் எரியும் மின் விளக்குகள் மற்றும் முதலுதவி பெட்டி, பாது காப்பு உபகரணங்களையும் இந்நிறுவனத்தில் படகு கட்டும் உரிமையாளர்களுக்கு வழங்க உள்ளது. இதனிடையே சிறப்பு அம்சங்களுடன் கூடிய முதல் படகினை சிதம்பரம் அருகேயுள்ள கிள்ளை கிராமத்தை சேர்ந்த அருண் என்பவருக்கு நாகை மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் முதன்மை அதிகாரி கே. விஜய் திங்களன்று வழங்கினார். மேலும் படகுகளை கட்டும், பழுது பார்க்கும் உரிமையாளர்களுக்கு தென்னங்கன்று களையும் தொடர்ந்து வழங்க உள்ளது. மீனவ சமுதாய மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறு நிறுவனத்தின் பொறுப்பாளர் வின்சென்ட் ஜெயின் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.