மயிலாடுதுறை, அக்.12- தமிழக வனத்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற வனவிலங்கு வார விழா போட்டிகளில் ஏவிசி கல்வி நிறுவன மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9 ஆம் தேதி புதன்கிழமை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரவீன்.பி.நாயர் தலைமையில் நடந்தது. இதில் ஏவிசி பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் டெக்னாலேஜி இரண்டாம் ஆண்டு மாணவி பி.சுஜிதா தமிழ் பேச்சு போட்டியில் முதல் பரிசும், ஏவிசி கல்லூரி விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜெ.ஜெயசுதா ஓவிய போட்டியில் முதல் இடத்தையும். மாணவர் என்.ஐயனார் பேச்சு போட்டியில் இரண்டாம் இடத்தையும் வனஉயிரின மாணவர்கள் ஆர்.கவுதம் மற்றும் பிரயாஷ்அவுடி வினாடி வினா போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இதே போன்று திருச்சியில் நடந்த வனவிலங்கு வார விழா போட்டியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்.அய்யனார். ஏஆர்.அருண்அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவிலான ரங்கோலி போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர். கல்லூரியின் ஆட்சி மன்றக்குழு தலைவர் என்.விஜய ரெங்கன், செயலர் கே.கார்த்திகேயன், பொருளாளர் என். ஞானசுந்தர், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பாலிடெக் னிக் இயக்குநர் ஏ.வளவன், ஏவிசி கல்லூரி மற்றும் ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள் ஆர்.நாகராஜன், எஸ்.கண்ணன், பேராசிரியர்கள், பணியாளர்கள் சக மாண வர்கள் ஆகியோர் பாராட்டினர்.