tamilnadu

img

நீர் மேலாண்மை திட்டப் பணிகள் ஆய்வு

 தரங்கம்பாடி, ஆக.25- நாகை மாவட்டம் செம்பனார்கோவில், காளஹஸ்தி நாதபுரம், கூடலூர், மாமாகுடி ஊராட்சிகளில் ஜல்சக்தி திட்ட பணிகளை மத்திய நீர்வளத் துறை துணை இயக்குநர் தரம்வீர்சிங் ஆய்வு செய்தார். ஆய்வில் செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணன், நல்லமுத்து, ஜனகர், ஆர்த்தி, ஒன்றியப் பொறியாளர்கள் விஜயன், தியாகு, சோமசுந்தரம், ஒன்றியப் பணிப் பார்வையாளர்கள் சாமிநாதன், ராஜலெட்சுமி, ராஜஷ்கண்ணா, ஊராட்சி செயலர்கள், ஜீவானந்தம், நாகராஜன், சற்குணம், மாதவன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

;