சீர்காழி, நவ.22- கொள்ளிடம் அருகே வடகால் கிரா மத்தில் கட்டி முழுமை பெறாத சேவை மையக் கட்டிடம் கழிவறையாகப் பயன்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ 12 லட்சம் மதிப் பீட்டில் சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் கட்டும் பணி முழுமை பெறாமல் தளம் தரைப் பகுதி போடாமல் அப்படியே அரை குறையாக விடப்பட்டுள்ளது. அதனால் வடகால் சேவை மையக் கட்டிடம் மட்டும் எந்த பயனுமின்றி அப்படியே கிடக்கிறது. குடிமகன்கள் இதனை பார் போல பயன்படுத்தி வந்ததாகவும் அப்பகுதியில் உள்ள வர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இக்கட்டிடம் ஒரு கழிவறை கட்டிடம் போலவே உள்ளது. கட்டி டத்திற்கு சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சீமைக்கருவேல முட்செடிகளும் வளர்ந்துள்ளன. வட கால் சேவை மையக் கட்டிடத்திற்கு தகவல் தொடர்பு மற்றும் ஊராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து வகையான புள்ளி விவரங்களை பதிவேற்றவும் ஊராட்சிக்கு அரசால் அனுப்பப்படும் தகவல்களை பெறவும் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையில் கணினி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டதா என்று பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே பயன்பாட்டில் இல்லாத, கழிவறையாகியுள்ள வடகால் சேவை மையக் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்கவும் அதனை பயன் பாட்டிற்கு கொண்டு வரவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.