மயிலாடுதுறை, டிச.7- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவர்கள் திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். பாரதிதாசன் பல்கலைக் கழக அளவிலான பளு தூக்கும், வலுதூக்கும் மற்றும் தடகள போட்டிகள் மஞ்சக்குடியில் உள்ள தனி யார் கல்லூரியில் அண்மை யில் நடந்தது. இதில் ஏவிசி கல்லூரி சார்பில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஜி. பிரபாகரன் மூன்றாம் ஆண்டு வணிக மேலாண்மை துறை வெள்ளி பதக்கம், எஸ். ஆதித்திய வர்மன் மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை வெண்கல பதக்கம், ஆர். பரத் முத லாம் ஆண்டு வணிகவியல் துறை தங்க பதக்கம், ஆர். சஞ்சய், வி.குபேந்திர குணபாலன் மூன்றாம் ஆண்டு வேதியல் துறை, கே. கார்த்திக் முதலாம் ஆண்டு கணினி பொறியியல் துறை எஸ்.ரோகித், வீ. ஏழில் அரசன் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை கே. சோம்நாத் மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை ஆகிய மாணவர்கள் பளுதூக்கும் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ள னர். ஆர்.சஞ்சய் மூன்றாம் ஆண்டு வேதியல் துறை வெள்ளி பதக்கம், எம்.சேது ராமன் முதலாமாண்டு தமிழ் வெள்ளி பதக்கம், கே. விஸ்வா மூன்றாம் ஆண்டு கணிபொறியியல் வெள்ளி பதக்கம், எம். முகமது ராசித் முதலாமாண்டு வணிக மேலாண்மை, எஸ்.ரோகித், ஆர்.பரத் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை, கே. சோம்நாத் மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை ஆகிய மாணவர்கள் வலுதூக்கும் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ள னர். இதே போன்று தடகள போட்டியானது பூண்டி கல்லூரியில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் ஏ.வி.சி கல்லூரி சார்பில் மூன்றாமாண்டு கணினி பொறியியல் மாணவி காவியா குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாண வர்களை ஏவிசி கல்லூரி தலைவர் என்.விஜயரங் கன், செயலர் கி.கார்த்திகே யன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், முதல்வர் இரா.நாகராஜன், உடற் கல்வி இயக்குனர் ராஜ் கமார், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டினர்.