சீர்காழி, நவ.16- சீர்காழி அருகே அரசூரில் 5 வருடத்திற்கும் மேலாக பய னற்று உள்ள மகளிர் சுகாதார வளாகக் கட்டிடத்தை இடித்து அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே அரசூரில் மகளிர் சுகா தார வளாகக் கட்டடம் உள்ளது. இது கட்டப்பட்டு 15 ஆண்டு ஆகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சுகாதார வளா கம் செயல்படாமல் உள்ளது. குளியல் அறை, கழிவறை, மின்மோட்டார் அறை, மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்புறத்தில் தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பெரி தும் பயன்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டு காலமாக செயல்படாததால் அப்பகுதியில் உள்ள பெண் கள் அவதியடைகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், நன்கு செயல்பட்டு வந்த மக ளிர் சுகாதார வளாகத்தால் பயன்பாடாக இருந்தது. இந்த கட்டிடத்திற்குள் இருந்த மின் மோட்டார் மாயமாகி விட்டது. இதனால் கட்டி டத்தை புதர் மண்டிக் கிடக்கிறது. இக்கட்டிடத்திற் குள் பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் வசித்து வருவ தால் அப்பகுதியில் குடியி ருப்போர் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே எந்த பயனு மின்றி விஷ ஜந்துக்களின் கூடாரமாக இருந்து வரும் மகளிர் சுகாதார வளாகக் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.