tamilnadu

img

பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் விழா

மயிலாடுதுறை, டிச.8- ஏவிசி கல்லூரியின் என்.எஸ்.எஸ், கத்தார் ஷெல் ஜிடிஎல் தமிழ் நண்பர்கள் உதவியுடன் வனம் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து நெல் ஜெயராமன் நினைவாக குறுங்காடு உருவாக்கும் நிகழ்ச்சி ஏவிசி கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. மயில்வனம் ஏவிசி கல்லூரியின் என்.எஸ்.எஸ், கத்தார் ஷெல் ஜிடிஎல் தமிழ் நண்பர்கள் உதவியுடன் வனம் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து 174 வகையான பாரம்பரிய அரிய மரங்கள் நடவு செய்து மயில் வனம் என பெய ரிடப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் முனைவர் ஆர் நாக ராஜன் தலைமை வகித்து மரங்களின் நன்மைகள் குறித்து பேசினார். டீன் மயில்வாகனன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.யமுனா ஆகியோர் முன்னிலை வகித்தார்.  கல்லூரி செயலர் கி.கார்த்திகேயன் முதல் மரக்கன்றை நட்டு வாழ்த்துரை வழங்கினார். வனம் தன்னார்வ அமைப் பின் இயக்குனர் வனம் கலைமணி 174 மரங்களின் முக்கி யத்துவம் மற்றும் மூலிகை பண்புகள் குறித்து பேசினார். என்.எஸ்.எஸ் அலுவலர் முனைவர் எஸ். ஜெயக்குமார் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். என்எஸ்எஸ் மாண வர்கள் மற்றும் வனம் அமைப்பின் ஆர்வலர்கள் சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.