tamilnadu

நாகப்பட்டினம் , புதுக்கோட்டை , தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

சீர்காழியில் நூலகர் தின விழா
சீர்காழி, ஆக.21-சீர்காழி எஸ்.எம்.எச். மேல்நிலைப் பள்ளியில் சீர்காழி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் நூலகத் தந்தை சீர்காழி எஸ்.ஆர்.அரங்கநாதனின் 127-வது பிறந்த நாள் விழா நாகை மாவட்ட நூலக அலுவலர் கோ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் செம்மலர் வீரசேனன் முன்னிலை வகித்தார். எஸ்.எம்.எச். பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.அறி வுடைநம்பி வரவேற்புரையாற்றினார். சீர்காழி வட்டாட்சி யர் எஸ்.சபீதாதேவி சிறப்புரையாற்றினார். ரோட்டரி சங்கத் தலைவர் எம்.பழனியப்பன் உள்ளிட்ட பலர் உரையாற்றி னர். வாசிப்பு இயக்கம் 2022-ன் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நூலகர் பரிசுகளையும், சான்றி தழ்களையும் வழங்கினார். கிளை நூலகர் கோ.விஜய் நன்றி கூறினார்.

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு
நாகப்பட்டினம், ஆக.21-இந்திய நுகர்வோர் மன்றம் சார்பில் நாகப்பட்டினம் சின்மயா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், புதன் கிழமை பள்ளித் தலைமை ஆசிரியை சி.கீதா பென்னட் தலைமையில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத் தலைவர் வழக்கறிஞர் பாஷ்யம், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மன்றத் தலைவர் ஆர்.ரமேஷ், பொதுச்செயலாளர் பி.அழகிரிசாமி, நாகப்பட்டினம் நக ராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இந்திய நுகர்வோர் பாதுகாப்பு மன்ற இயக்குநர் சந்தானராஜன், உணவுப் பாது காப்புப் பிரிவுப் பொறுப்பாளர் முத்தையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உணவுப் பாதுகாப்பு முறை பற்றிச் சிறந்த கேள்விகள் கேட்டு வெற்றி பெற்ற மாண வர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம்
அறந்தாங்கி, ஆக.21-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குணசேகர் தலைமையில் புதனன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயசித்ரகலா, அறந்தாங்கி தனி வட்டாட்சியர் செந்தில் நாயகி, ஆவுடையார் கோவில் தனி வட்டாட்சியர் கிருஷ்ண வேணி, மணமேல்குடி தனி வட்டாட்சியர் மார்ட்டின்கிங், மருத்துவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பல்நோக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரியா, ஆவுடையார் கோவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் மூன்று சக்கர வாகனம், உதவித்தொகை மற்றும் கடனுதவி கோரி 42 மனுக்கள் வரப் பெற்றன. மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு உரிய மேல் நடவடிக்கைக்காக அனுப்பப் பட்டன

மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ள கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி
தஞ்சாவூர், ஆக.21-மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ள கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மத்திய அரசு கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூரில் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், மத்திய அரசு கூடுதல் செய லாளர் பிரமோத்குமார் ஃபதக் தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை முன்னிலை வகித்தார்.  இதில் கூடுதல் செயலாளர் பேசுகையில், “கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட நீர் மேலாண்மை இயக்க நிகழ்ச்சி கள் மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் அவ சியம், மழைநீரை சேமிப்பதன் அவசியம், நிலத்தடி நீரை பாதுகாப்பதன் அவசியம் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு உள்ள கட்டிட வரைவுகளுக்கு மட்டும் அனு மதி அளிக்கப்படுகிறது. வீடுகளில் மழைநீர் மற்றும் உப யோகப்படுத்தப்பட்ட நீரை உறிஞ்சு குழிகளில் செலுத்தி டும் வகையில் அமைப்பினை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.  இக்கூட்டத்தில் மத்தியக் குழுவினர், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் பேராவூரணியில் கலந்தாய்வு கூட்டம் 
தஞ்சாவூர், ஆக.21-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்துள்ள சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் தொடர்பான ஒருங்கி ணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தஞ்சாவூர் தனித் துணை ஆட்சியர் (முத்திரைத் தாள் கட்டணம்) அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். பேராவூ ரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தஞ்சாவூர் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ. கமலக்கண்ணன் பேசுகை‌யி‌ல், “பேராவூரணி வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உரிய முறையில், விடுதலின்றி விளம்ப ரம் செய்யப்பட்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இத்திட்டம் ஆக.22 முதல் செயல்படுத்தப்படும்.  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அன்றைய தினமே, வட்ட அலுவலகத்தில் கணினியில் பதிவு செய்யப்பட்டு தொடர்பு டைய துறைக்கு அனுப்பப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலை யில், பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட உள்ளதால் இத்திட் டத்தினை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து நிலை அலு வலர்களும் ஒத்துழைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.