tamilnadu

img

பழுதடைந்து  விழும் நிலையில் மின்கம்பம்

தரங்கம்பாடி, மே 30-நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே வடகரைபகுதி மற்றும் இளையாளூர் கிராமத்தை இணைக்கக் கூடியமுக்கிய சாலையின் வயலோரத்தில் உள்ள ஒரு மின்கம்பங்கள் பழுதடைந்து கீழே சரிந்து விழும் நிலையில் உள்ளது.உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்பாதை கம்பங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக மின் கம்பங்களை சரி செய்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்து பல மாதங்களாகியும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.