சீர்காழி, மார்ச் 4- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி வீரப்பிள்ளை(60). இவர் தனக்கு சொந்தமாக உள்ள மாடுகளுக்கு ரூ.40 ஆயிர த்துக்கு வைக்கோல் வாங்கி வீட்டிற்கு அருகில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம்வைக்கோல் போர் அமைத்து பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் வைக்கோல் புதனன்று திடீ ரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் போர் முழுவதும் எரிந்து நாசமாயின. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு அலுவலர் ஜோதி தலை மையில் படைவீரர்கள் வந்து தீ மேலும் பரவா மல் அணைத்தனர். இதுகுறித்து வீரப்பிள்ளை கொள்ளிடம் காவல்துறையில் கொடுத்த புகா ரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.