சீர்காழி, மே 20-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே காட்டூர் கிராமம் கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(60), கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு ஊருக்கு திரும்ப உப்பனாற்றில் இறங்கி சென்ற போது ஆழப் பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தார். கரை ஒதுங்கிய அவரின் உடலை மீட்டு புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.