tamilnadu

img

மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி 

 தரங்கம்பாடி, ஆக.20- தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டி நாகை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிரீத்தி என்கிற 12ம் வகுப்பு மாணவி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்று தமிழக அரசின் ரூ.10000 ரொக்கப் பரிசு பெற்றார். மேலும் அதே பள்ளியின் ஹீலிஸ் இன் பான்டினா என்கிற 12ம் வகுப்பு மாணவி கவிதைப் போட்டி யில் மூன்றாமிடம் பிடித்து ரூ.5000 ரொக்கப் பரிசைப் பெற்றார்.  பரிசுகளை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை செயலர் அன்பரசி வழங்கினார். பரிசு பெற்ற மாணவிகளை முதன்மைக் கல்வி அலுவலர் க.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலர் ந.குமார் மற்றும் பள்ளி முதல்வர் பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.