சீர்காழி, ஆக.17- நாகை மாவட்டம் சீர்காழி அருகே குன்னம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் நெற்பயிர் பசுந்தாளின் நிறம் மாறியும் உரிய காலத்திற்கு முன்பே வளர்ச்சி குன்றிய நிலையில் குறைந்த எண்ணிக்கையில் நெல் மணிகள் கொண்ட கதிர் வந்திருந்தது. வேளாண் துறையில் அங்கீகரிக்கப்பட்ட கோ 51 ரக நெல் விதையை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் வயலில் உள்ள நெற்பயிரில் ஏற்பட்ட இத்தகைய மாற்றத்தினால் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிய விவசாயிகள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேளாண் அதிகாரிகள் குழுவினர் குன்னம் கிராம நெற்பயிரில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். நீண்ட ஆய்வுக்குப் பிறகு மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம் கூறுகையில், பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் கதிர் முற்றியது போல் உள்ளது. பழுப்பு நிறமாகியுள்ளது. ஒரு ரக நெல் விதை மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது. இதில் கலப்பு ஏதும் இல்லை. கதிர் முன்பே வந்திருக்கும் இளமையான நாற்றின் கதிர் சில நாள் கழித்து வரும் அப்படி இல்லையென்றால் கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ளதா என்றும் சந்தேகிக்கிறோம். விதையால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் மணிமாறன் கூறுகையில், 25 நாட்களில் நாற்றை பறித்து நட்டால் கதிர் நன்றாக இருக்கும். எந்த பாதிப்பும் வராது. 5 நாட்கள் கழித்து நடவு செய்தாலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்றார்.