tamilnadu

img

ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம்

தரங்கம்பாடி, அக்.17- நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் வியாழனன்று சங்கத்தின் வட்டத் துணை செயலாளர் ஏ.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும், பாசன, வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், கீழமருதாந்தநல்லூர்- பொன்வாசநல்லூர் வருவாய் கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை குறைவாக வழங்கிய ஆனந்ததாண்டவபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தை  கண்டித்தும் நடைபெற்ற மறியலில் மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், வட்ட செயலாளர் அறிவழகன், மாணவர் சங்க வட்டத் தலைவர் குமரேசன், கிளை செயலாளர்கள் கலைமாறன், அலெக்ஸ், பிரபாகரன், சதீஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஏராளமானோர் பங்கேற்ற வாலிபர் சங்கத்தின் சாலை மறியல் போராட்டத்தை அறிந்து வந்த அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.