சீர்காழி எஸ்.எம்.எச்.பள்ளியில் தடகளப் போட்டி
சீர்காழி, ஜூலை 29-நாகை மாவட்டம் சீர்காழி எஸ்.எம்.எச். மேல்நிலைப் பள்ளியில் 98-ஆம் ஆண்டு தடகளப் போட்டிகள் 2 நாள் நடைபெற்றது. இதில் 52 வகையிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு 35 போட்டிகளும். மாணவிகளுக்கு 17 போட்டிகளும் நடைபெற்றன. இதில் 928 பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஆர்.ஆகாஷ், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கே.சபரிநாதன், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் எஸ்.அலெக்ஸ் பாண்டியன், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் டி.வில்சன் எபினெசன் ஆகிய மாணவர்கள் சாம்பியன் பட்டம் பெற்றனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளிச் செயலர் எஸ்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் எஸ்.அறிவுடைநம்பி வரவேற்புரை யாற்றினார். உதவி தலைமையாசிரியர் டி.சம்பத்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக போட்டிகளை மூத்த உடற்கல்வி ஆசிரி யர் எஸ்.பாரி துவக்கி வைத்தார். பள்ளி உடற்கல்வி இயக்கு நர் முரளிதரன் நன்றியுரையாற்றினார். உடற்கல்வி ஆசிரி யர்கள் டி.முரளி. பி.மார்கண்டன், சக்திவேல், சுதாகர் ஆகி யோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். உதவி தலைமை யாசிரியர் கே.சம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய கல்விக் கொள்கை விழிப்புணர்வு பிரச்சாரம்
நன்னிலம், ஜூலை 29-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட் டம் நன்னிலம் ஒன்றியம் சார்பில் புதிய கல்விக் கொள்கை யை எதிர்த்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. கொல்லுமாங்குடியில் தொடங்கிய பிரச்சார இயக்கம் இஞ்சிக்குடி, பேரளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நன்னிலம் வந்தடைந்தது. பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி யன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு ரஜினிகாந்த், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் லிங்கம், ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி, வரத வசந்தராஜன், வசந்தபாலன், ராஜா, சுதாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த தின கருத்தரங்கு
புதுக்கோட்டை, ஜூலை 29-புதுக்கோட்டையை அடுத்து கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் வாசகர் பேரவை சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. சுபபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். கே.ஆர்.குணசேகரன் கே.ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாச கர் பேரவை செயலர் பேராசிரியர் சா.விஸ்வநாதன், திலக வதியார் திருவருள் ஆதினத்தின் கர்த்தா தயானந்த சந்திர சேகர சுவாமிகள் ஆகியோர் கருத்துரை வழங்கினார். விழாவில் ஞானாலயா நூலக நிறுவனர் பா.கிருஷ்ண மூர்த்தி பேசும்போது, புதுக்கோட்டையில் ஆங்கிலம் படித்த முதல் பெண்மணி. சென்னை மருத்துவக்கல்லூரியில் முத்துலெட்சுமி பயிலும் போதும் இவர் ஒருவரே 1912ல் முதல் பெண் மருத்துவராகி பெருமை சேர்த்தார். பாரதியை சந்தித்த பெருமையும் இவருக்குண்டு. சாதிமறுப்புத் திரு மணம் செய்துகொண்டவர். அடையாறு புற்றுநோய் மருத்து வமனை மட்டுமல்லாமல் கஸ்தூரிபா மகப்பேறு மருத்துவ மனை மற்றும் ஆதரவற்றோர்க்கான அவ்வை இல்லம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டதே என்றார். முன்ன தாக முதல்வர் துணைமுதல்வர் சுப.தாரகேஸ்வரி வர வேற்க, உதவிப் பேராசிரியர் கே.தர்மபாலன் நன்றி கூறி னார்.