தரங்கம்பாடி, மார்ச் 12- பொறையார் அருகேயுள்ள திருக்களா ச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரு ம்பப் பெற வேண்டி மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் வெள்ளியன்று மாலை நடை பெறுகிறது. ஆயப்பாடி திருக்களாச்சேரி, பெரியக்கூத்தூர் பிலால் நகர், எடுத்துக்கட்டி சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களின் ஜமா த்தார்கள் சார்பில் ஆயப்பாடி வக்பு நிர்வாக சபையின் தலைவர் முகமது பாரூக் தலைமை யில் நடைபெறவுள்ள பேரணி - பொதுக்கூ ட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆர்.கம லக்கண்ணன், பட்டிமன்ற நடுவர்-பேச்சாளர் ஐ.லியோனி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மார்க்சிஸ்ட் கட்சியின் ஊடகவியலாளர் சிந்தன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்று கின்றனர். வெள்ளியன்று நடைபெறவுள்ள பேரணி யில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கே ற்க உள்ளதாக ஜமாத் கூட்டமைப்பினர் கூறி யுள்ளனர்.