சீர்காழி, ஜூலை 17- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டத்தில் நீர் மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி, வட்டார அள விலான பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகத்தி லிருந்து பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை அடைந்தது. பேரணியை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கமா லூதீன் துவக்கி வைத்தார். வட்டார அள விலான துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர். கொள்ளிடம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை ஆகிய பகுதி களில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதா ளத்திற்குச் சென்றுள்ளதை நிபுணர்கள் கொண்ட குழுவினர் எச்சரிக்கை விடுத்ததை யடுத்து, நிலத்தடி நீரை சேமிக்கும் அவசி யத்தை உணர்த்துவதற்காக நடத்தப்பட்டது.