தரங்கம்பாடி ஜூன், 23- உடுமலை சங்கரை ஆணவ படுகொலைச்செய்த குற்றவாளிகளை விடுதலை செய்தும்,தண்டனையை குறைத்தும் தீர்ப்பளித்ததை கண்டித்து நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், மங்கநல்லூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்ற து. மாவட்ட குழு உறுப்பினர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், மற்றும் வைரவன், பரமானந்தம், பாஸ்கரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.