தரங்கம்பாடி, செப்.24- அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜி.ஸ்டாலினை நள்ளிரவில் வீடு புகுந்து அடாவடித்தனமாக கைது செய்த மயிலாடுதுறை காவல்துறை யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம் திருக்கடையூரில் செவ்வாயன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி.இராசையன், ஏ.ரவிச் சந்திரன், வட்டக்குழு உறுப்பினர் கள் கோவிந்தசாமி, காபிரியேல், மார்க்ஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மக்கள் பிரச்சனைக்காக போராடுகிறவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையிலடைப் பதையும், தரைக்கடை வியாபாரி களின் பிரச்சனைகளுக்காக மற்றும் அரசு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி வருகிற தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான துரைக் கண்ணுவின் பெயரை ரவுடி பட்டிய லில் காவல்துறையினர் சேர்த்ததை கண்டித்தும், வரும் 27 அன்று மயி லாடுதுறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த உள்ளது. இது குறித்து திங்களன்று மாலை குத்தாலம் வட்டம் காஞ்சிவாய் கிரா மத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டம் ஒன்றில் பேசியதால் அடக்கு முறையோடு, தனி மனித உரிமை யை பறிக்கும் விதமாக தோழர் ஜி. ஸ்டாலினை கைது செய்ததை கண் டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். நாகை நகரக்குழு சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப் பணித் தொழிலாளர் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் பி. முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சு.மணி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல். முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.குருசாமி, ஆர்.ராமமூர்த்தி, எஸ்.விஜயகுமார், ஆர்.நாகேஸ் வரி, ஜி.ராஜேஸ்வரி, டி.தினேஷ் பிரபு, கா.காந்திநேசன் சண்முக நாதன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.
குடவாசல்
அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் கைதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பி.கந்தசாமி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலி யபெருமாள் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் கே.சுப்பிர மணியன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் என்.பாலையா, நீடாமங்கலம் வி.தொ.ச. ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பூசாந்திரம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சி.டி.ஜோசப், வலங்கைமான் கட்சி ஒன்றியச் செயலாளர் என்.இராதா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். சுமதி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சங்க மாவட்டத் தலைவர் முனியாண்டி உள்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மயிலாடுதுறை காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மயிலாடுதுறை
நாகை மாவட்டம், மயிலாடு துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி.ஸ்டாலினை பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு பதிவு செய்து நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட் டம், கட்சியின் வட்டச் செயலாளர் மேகநாதன் தலைமையில் மயிலாடு துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மாரி யப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.கணேசன், வட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.மணி, எஸ்.மாசிலா மணி, ரெ.இரவீந்திரன், அ.அறிவழ கன், ஆர்.கோவிந்தசாமி, த.ராயர் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.