சீர்காழி, ஜூன் 3-நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதி 23 ஊராட்சிகளில் பள்ளிக்கட்டிடம், கழிவறைக் கட்டிடம், சுற்றுச்சுவர் கட்ட ஓ.என்.ஜி.சி.,சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் சரவணன் தலைமை வகித்தார். ஒன்றியபணி மேற்பார்வையாளர் வேலழகன் வரவேற்றார். கூட்டுறவு நிலவள வங்கித் தலைவர் நற்குணன், பி.டி.ஓ.,தமிழ்க்கொடி, ஓ.என்.ஜி.சி மேலாளர் ரவிச்சந்திரன், அலுவலர் உஷாபிரபாகரன் முன்னிலை வகித்தனர்.ஓ.என்.ஜி.சியின் காரைக்கால் காவிரிபடுகை உதவி மேலாளர் வி.வி.மிஸ்ரா பள்ளிகளை சீரமைக்க நிதி உதவியாக ரூ.1 கோடியே 54 லட்சத்திற்கான காசோலையை ஒன்றிய ஆணையர் சரவணனிடம் வழங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் பாபு, ஒன்றிய பொறியாளர் பிரதீஷ்குமார் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய உதவிபொறியாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் மாதானத்தில் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கும் வாயுவை சமையல் எரிவாயுவாக இப்பகுதியில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று இதனை உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.