நாகப்பட்டினம், அக்.13- நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ரவிச்சந்திரன் 12.10.2019 அன்று மாலை பெரம்பூரில் காலமானார். இவர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமாகிய எஸ்.துரை ராஜின் சகோதரர் ஆவார். மறைந்த எஸ்.ரவிச்சந்திரனின் இறுதி ஊர்வலம் ஞாயிறு பிற்பகல், அவரது இல்லத்திலி ருந்து புறப்பட்டது.