தரங்கம்பாடி, நவ.2- நாகை மாவட்டம், தரங்கம் பாடி பேரூராட்சிக்குட்பட்ட சீமோன் தெரு, வடக்கு மேட்டுத்தெரு, கண் ணித்தோப்பு ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பி வியாழன்று இரவு அறுந்து விழுந்து தாழ்வழுத்த மின் கம்பியில் விழுந்ததில் 50 க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் வெடித்து சிதறியதால் அப்பகுதி முழுவதும் இருண்டு கிடந்தது. தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், சுகாதார ஆய் வாளர் சுப்ரமணியன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்து உடனடியாக தெருவிளக்குகள் பொருத்தும் பணியை துவக்கி னர். மின்கம்பி அறுந்து விழுந்ததால் ஒரு சில வீடுகளில் பல்வேறு மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்து விட்டதாக பொதுமக்கள் கூறினர்.