tamilnadu

img

பொறையார் போக்குவரத்து பணிமனையில் புதிய ஓய்வறை, பராமரிப்பு கட்டிடம் திறப்பு

தரங்கம்பாடி, பிப்.8- நாகை மாவட்டம் பொறையார் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் ஊழி யர்களுக்கான புதிய ஓய்வறை கட்டிடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. அங்கு இருந்த  பழமை வாய்ந்த ஓய்வறை கட்டிடம் கடந்த  20.10.2017 அன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பிரபாகரன், மணி வண்ணன், தனபால், பாலு, ராம லிங்கம், சந்திரசேகா, முனி யப்பன், அன்பரசன் ஆகிய 8  ஊழியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.39 லட்சம் செலவில் புதிதாக கட்ட ப்பட்ட ஓய்வறை மற்றும் பரா மரிப்பு கூடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், போக்கு வரத்து கழக மேலாளர் ஜெயக்கு மார், சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாக ராஜன், ஒன்றியப் பொறியாளர் சோமசுந்த ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;