tamilnadu

img

திருச்சியில் அடுத்த மாதம் கல்வி உரிமை மாநாடு தமுஎகச நடத்துகிறது

 நாகப்பட்டினம், ஜூலை 14- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் -கலைஞர்கள் சங்கத்தின் இரு நாள் மாநிலக் குழுக்கூட்டம், நாகப் பட்டினம், யாழிசை அரங்கத்தில் சனிக்கிழமை காலை துவங்கி, ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெற்றது. இருநாள் கூட்டத்திலும், முதல் நாள் மாலை நடைபெற்ற பொதுக் கருத்தரங்கிலும் மாநில கெளரவத் தலைவர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் தலைமைவகித் தார். மாநிலப் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மாநிலத் துணைச் செயலாளர் மதுக் கூர் இராமலிங்கம், மாநிலப் பொரு ளாளர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் எஸ்.ஏ.பெருமாள் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர். முதல்நாள் மாலை, “என்ன செய்ய வருகிறது தேசியக் கல்விக் கொள்கை-2019?” என்னும் பொரு ளில் பொதுக் கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கிற்கு ச.தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் ப.பால சுந்தரம் வரவேற்றார். முன்னாள் துணைவேந்தர் லெ.ஜவகர் நேசன், கல்வியுரிமைச் செயற்பாட்டாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா உள்ளிட்டோர் கருத்துரை யாற்றினர். நாகை மாவட்டத் தலை வர் ந.காவியன் நன்றி கூறினார். இரண்டாம் நாள் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘செம்மலர்’ பொன்விழாவை ஒட்டி, சந்தா சேர்ப்பு இயக்கத்தை முன்னெ டுப்பது, எனத் தீர்மானிக்கப்பட்டது. சர்வதேசத் திரைப்படவிழா திரு வண்ணாமலையில் செப்டம்பரில் நடத்தப்படும். மாட்டிறைச்சி சூப் அருந்திய முஸ்லிம் இளைஞர் முக மது பைசான் என்பவரை, நாகை-பொரவச்சேரியில் மத வெறியினர் தாக்கியதை த.மு.எ.க.ச. வன்மை யாகக் கண்டிக்கிறது. சட்டப்பூர்வ மாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநிலங்களில் நடந்த இந்நிகழ்வு தமிழகத்திலும் துவங்கி விட்டதால், ”என் உணவு, என் உரிமை” என வலி யுறுத்திட, சிறுபான்மையினர் வாழ்வி யல் அறிதல் முகாம், திண்டுக்கல்லில் நடத்தப்படும். கலை இலக்கிய இரவுகள் நடத்து வதில் காவல்துறை நேரக் கட்டுப் பாடுவிதிப்பதைத் தவிர்த்து, விடியல் வரை நடத்திட அனுமதிக்க வேண்டும்.  மாநிலக் கல்வி உரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் காவிமயக் கல்விக் கொள்கை வரைவினை முழு மையாகத் திரும்பப் பெற்றிட, ஆகஸ்ட் இறுதியில் திருச்சியில் கல்வி உரிமை மாநாடு நடத்தப்படும். இதற்குத் தென் மாநில முதல மைச்சர்கள், அரசியல் கட்சித் தலை வர்கள், கல்வியாளர்கள், கருத்தா ளர்கள், கலை இலக்கியப் பண்பாட் டுச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட் டோரைப் பங்கேற்கச் செய்வது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.