நாகப்பட்டினம், மார்ச் 15- நாகை மாவட்டம், வேதாரணி யம் வட்டத்தைச் சேர்ந்த ஆறு காட்டுத்துறை கிராமத்தில், தொடர் வேலை நிறுத்தம் நடத்தி வரும் வேளாங்கண்ணி, செரு தூர், காமமேஸ்வரம், விழுந்த மாவடி உள்ளிட்ட15 கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வேதாரணியம் பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலை களைப் பயன்படுத்திச் சில கிரா மத்து மீனவர்கள் மீன் பிடிப்பதால், மற்ற மீனவர்களுக்கு மீன் கள் கிடைப்பதில்லை. மேலும் மீன்கள் வளமும் குறைந்துவிடும். எனவே, இவற்றைப் பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மீனவர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம், நட வடிக்கை எடுக்கும் வரை தொட ரும் என கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. மீனவர் களுக்கு இடையேயான தகராறு சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட மீனவ கிராமங்களும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.