tamilnadu

நாகப்பட்டினம் , திருச்சி முக்கிய செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டிகளில் பொறையார் சர்மிளா பள்ளி வெற்றி
தரங்கம்பாடி, நவ.16- நாகப்பட்டினம் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டிகள் கடந்த வாரங்களில் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். தமிழக காடுகள் மற்றும் வன விலங்குகள் துறை நடத்திய ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசு பெற்றார். அவருக்கு, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட சிறுசேமிப்புத் துறை நடத்திய போட்டிகளில் குழு நாடகப் போட்டியில் ஆர்த்தி, அபிநயா, யஷ்வந்தினி, ஐயப்பன், விஷால், கிரண்ராஜ், கஜேஸ்வரன் ஆகியோர் இரண்டாமிட மும், குழு நடனப் போட்டியில் சுஷ்மிதா, அகல்யா, ஹர்ஷிதா, ஐஸ்வர்யா, சுவேதா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். அவர்க ளுக்கான பரிசுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் க.குணசேகரன் வழங்கினார்.  பள்ளிக் கல்வித்துறையின் அறிவியல் கண்காட்சி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அக்கண்காட்சியில் நாகை மாவட்டத்தின் இரண்டாமிடத்தை ஐயப்பன் என்ற மாணவர் கைப்பற்றியுள்ளார். அவருக்கான சான்றிதழையும், பரிசையும் முதன்மை கல்வி அலுவலர், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.  துளிர் அறிவியல் இயக்கம் நடத்திய ஜந்தர் மந்தர் ஆங்கில வினாடி வினாப் போட்டியில் சீனியர் பிரிவின் புகழ், குகராஜ், செல்வகாந்தன் ஆகியோர் முதலிடத்தையும், சூப்பர் சீனியர் பிரிவின் சஹானா, பெட்ரிக் சாம் தாமஸ், ஐஸ்வர்யா அணியும், ஜூனியர் பிரிவின் தீபிகாஸ்ரீ, சுபஸ்ரீ, ரஞ்சனி அணியும் மூன்றாமிடத்தை பெற்று தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மையத்தின் தலைமையாசிரியர் அவர்களிடமிருந்து கேடயங் களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்.  மேலும் கல்வி மாவட்ட அளவில் முதற்சுற்றும், மாவட்ட  அளவில் இரண்டாம் சுற்றும் வென்று பரிசுகள் பெற்ற மாணவ, மாணவிகளை குழந்தைகள் தின விழாவில் பரிசுகள் வழங்கி பள்ளி முதல்வர் பாண்டியராஜன் மற்றும் ஆசிரிய- ஆசிரி யைகள் பாராட்டினர்.

திருச்சி: மாணவர், தனியார் கல்லூரி மாணவி தற்கொலை
திருச்சி,நவ.16- திருச்சியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஐஐடி யில் மாணவி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு பேராசிரியர்க ளின் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.அதற்குள் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருச்சி கே.கே.நகரை அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஜெப்ரா பர்வீன் என்பவர் விடுதியில் தங்கி படித்த வந்தார். இந்நிலையில் வியாழனன்று தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விடுதிக்காப்பாளர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி மாணவிகள் குற்றம் சாட்டி யுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வந்த மாணவர் செந்தில்குமார் என்பவர் தேர்வில் தோல்வி காரணமாக எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.