tamilnadu

நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

சீர்காழி பகுதியில் ஒரே நாளில் பழுதான புதிய தார்ச்சாலை 
சீர்காழி, ஆக.20-நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை மறுநாளே பஞ்சர் ஆனது. பகலில் தார்ச் சாலை போடாமல் இரவு 10 மணிக்கு மேல் மொத்தம் மூன்று தினங்கள் தார்ச் சாலை போடப்பட்டது. இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இருக்காது. 200 அடி தூரத்துக்கு மட்டும் நகராட்சி மின்சார விளக்கு எரிகிறது. இதனால் இருளில் சாலை போட்டதால் பிடாரி வடக்கு வீதி சிறுவேம்பு பராசக்தி கோயில் அருகே இரண்டு இடங்களில் தார்த்சாலை பள்ளமாக உள் வாங்கி குழியாக மாறி விட்டது.  பழுதான தார்ச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டித் தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி
மன்னார்குடி, ஆக.20- மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 25-ம் தேதி காலை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இந்து தமிழ் நாளிதழ் இணைந்து ஆளப் பிறந்தோம் நிகழ்ச்சியை நடத்து கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்காக இலவசமாக நடைபெறும் வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஐ.எ.ஏஸ்.அதி காரி சி.காமராஜ், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி., இந்து நாளிதழ் ஆசிரியர் சமஸ், சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமி இயக்குனர்கள் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி, மற்றும் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழ்கண்ட முறையில் முன்பதிவு செய்து கொள்ள வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள விரும்பும் மாண வர்கள் தங்களது செல்போனில் HTTM <Space> Name <Space> Pincode to 9773001174 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி தங்களது வருகையை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயை கொலை செய்த மகனுக்கு 10 ஆண்டு சிறை
புதுக்கோட்டை, ஆக.20-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திரு நாலூரை சேர்ந்தவர் எஸ்.வசந்தா(60). இவரது மகன் எஸ். சமரசம்(35). விவசாயி. குடும்ப சொத்தை தனக்கு எழுதித் தரக்கோரி தாய் வசந்தாவிடம் சமரசம் அடிக்கடி தக ராறு செய்துள்ளார். அதற்கு வசந்தா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015-ல் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த ஊதாங்குழலை எடுத்து வசந்தாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தா இறந்து விட்டார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து, சமர சத்தை கைது செய்தனர். இவ்வழக்கு புதுக்கோட்டை மக ளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட சமரசத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.