tamilnadu

நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கன்னியாகுமரி முக்கிய செய்திகள்

கோவில் குளத்தில் மூழ்கிய தாய், மகள் பலி
சீர்காழி, டிச.11-நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உமை யாள்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி (35). இவரை கணவர் அழகேசன் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விட்டுச் சென்றதால் தனது தாய் பூங்கோதையுடன் வசித்து வருகிறார். சாந்தியும் மகள் வைஷ்ணவியும் (7), உமை யாள்பதி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் குளத்தில் செவ்வாயன்று குளித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது குளத்தில் மழை நீர் அதிகம் தேங்கியிருந்த தால், ஆழமான இடத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படைவீரர்கள் நீண்ட நேரம் போராடி நீருக்குள் மூழ்கி இறந்த தாய் சாந்தி, மகள் வைஷ்ணவி ஆகியோரின் உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிச.14,15-ல் வேட்புமனு தாக்கல் கிடையாது
திருவாரூர், டிச.11- டிச.27, டிச.30 ஆகிய இரு தினங்களில் நடைபெற வுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் களுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலு வலர்களால் டிச. 9 முதல் பெறப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, எதிர்வரும் டிச.14, 15(சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்) வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது என திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தொடர் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படுமா? 
அரியலூர், டிச.11- அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம், சுண்டகுடி, நாகமங்களம் ஆகிய கிராமங்களின் வழியாக மருதை யாற்றிலிருந்து இரவு நேரங்களில் பொக்லைன் மூலம் லாரி கள் மணல் அள்ளிச் செல்கின்றன. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், பெரம்பலூர், திருச்சி, சிதம்பரம், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு தொடர்ந்து மணல் கடத்தல் செய்து வருகின்றன.  மருதையாற்றை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும், அரசியல் பிரமுகர்களும் ஆளும் கட்சியினரும் இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட னடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, தொடர்கிற மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றியச் செயலாளர் துரைஅருணன் கோரிக்கை விடுத் துள்ளார்.

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீன்பிடி நிறுத்தம் கவிழ்ந்த படகிலிருந்து 17 பேர் மீட்பு
குழித்துறை, டிச.11- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 17-மீனவர்கள் பத்திரமாக மீட்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 1000-க்கும் மேற்பட்ட கட்டு மர வள்ளம் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் எனவே அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் குறும்பனை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாயன்று இரவு முதல் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது இதனால் புதனன்று அதி காலை மீன்பிடி தொழிலுக்கு செல்ல தயாராக இருந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 1000-க்கும் மேற்பட்ட வள்ள, கட்டுமர மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் தொடர்ந்து கடல் சீற்றத்துடனே காணப்படுவதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாது காப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இந்த கடல் சீற்றத்தில் செவ்வாயன்று இரவு தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு 17-மீனவர்களுடன் சென்ற மார்னிங் ஸ்டார் விசைப்படகு நடுக்கடலில் சேதமடைந்து கவிழ்ந்தது.  இந்த விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய அந்த படகில் இருந்த மீனவர்கள் ததேயூஸ், மைக்கல், வசந்த், அருள், கபில், டாண், லூக்காஸ்,கண்ணையா, ஜாக்சன், ஜார்ஜ் மற்றும் 7-வங்கதேச மீனவர்கள் உட்பட 17-பேரை சக விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்த னர்.