tamilnadu

திருவனந்தபுரம்,நாகர்கோவில், நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

கேரளத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
திருவனந்தபுரம், செப்.1- கேரளத்தில் ஞாயிறு (செப்.1) தொடங்கி 4 நாட்கள் பலமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 10 மாவட்டங்க ளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணா குளம், இடுக்கி, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்களன்று ஆலப்புழா, இடுக்கி, மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும் செவ்வாயன்று ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும் புதனன்று கொல்லம், பத்த னம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைகள் தாலுகா அளவில் மழை நிலவரத்தைப் பொறுத்து முழுமையாக செயல்பட வேண்டும் என கேரள மாநில பேரிடர் மீட்புக்குழு அறி வித்துள்ளது. மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்பு கேரளத்தில் 250 கிளைகளுக்கு மூடுவிழா 2 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு
திருவனந்தபுரம், செப்.1-பத்து வங்கிகளை இணைத்து நான்காக மாற்றும் மத்திய அரசின் முடிவால் கேரளத்தில் மட்டும் சுமார் 250 வங்கி கிளை கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.  வங்கிகள் இணைப்பால் இடம் மாற்றம், விருப்ப ஓய்வு போன்றவை அதிகரிக்கும். அதிகாரிகள் நிலையில் உள்ள பலர் மாநிலத்தைவிட்டு வெளியில் சென்று பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். எஸ்பிஐ இணைப்புக்கு பிறகு 32 நாணய மையங்கள் உட்பட 200க்கும் அதிகமான கிளைகள் கேரளத்தில் மூடப்பட்டன. கனரா வங்கி அதிகாரிகள் பணியிடத்துக்கான ரேங்க் பட்டியலும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. 1600 பேரது ரேங்க் பட்டியலில் 300 பேர் கேரளத்தில் உள்ளவர்கள்.  இணைக்கப்படும் வங்கிகளுக்கு கேரளத்தில் 1482 கிளை கள் உள்ளன. 250 கிளைகளோடு மண்டல அலுவலகங்களும் மூட வேண்டிய நிலையில் உள்ளன. சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடன் இணைக்கும் முடிவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 2 இனங்களில் உள்ள 700 கிளைகளில் சுமார் 110 கிளைகள் மூடப்படும். யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேசன் வங்கி போன்றவற்றின் 413 கிளைகளில் 100 கிளைகள் மூடப்படும். ஓரியண்டல் வங்கியும் யுனைடெட் வங்கியும் பஞ்சாப் நேசனல் வங்கியும் இணையும்போது 20 கிளைகளும் அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணையும்போது 20 கிளைகளும் மூடப்படும்.

சிறுமியிடம் ரயிலில் பாலியல் சீண்டல் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் கைது
நாகர்கோவில், செப்.1-குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதி யினர் கடந்த மாதம் 30 ஆம் தேதி தனது 8 வயது குழந்தை யுடன் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிர சில் ஊருக்கு புறப்பட்டனர். இவர்கள் பயணம் செய்த முன் பதிவு பெட்டியில் குமரி மாவட்டம் கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் மனோஜ் (32) என்பவரும் பய ணம் செய்தார். இரவு உணவுக்கு பின்னர் அப்பெட்டியில் உள்ள அனைவரும் தூங்கினர். தம்பதியரின் 8 வயது சிறுமியும் தனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் தனியாக படுத்து தூங்கி னார். திடீரென சிறுமி அழுகை சத்தம் கேட்டு அனைவரும் எழுந்தனர். அப்போது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் மனோஜ் ஈடுபட்டதை உணர்ந்த மற்றவர்கள் அவரை பிடித்து ரயிலில் இரவு பணியில் இருந்த ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்னர் நாகர்கோவில் ரயில்வே காவல் துறையினரிடம் மனோஜை ஒப்படைத்தனர். கனடாவில் கப்ப லில் பணிபுரிந்து வரும் டிப்ளமோ பட்டதாரியான மனோஜ் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை வந்து அங்கி ருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் ஊருக்கு வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டப் பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்த நாகர்கோவில் ரயில்வே காவல் துறையினர் ஞாயிறன்று நீதிமன்றத்தில் மனோஜை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் விடக் கோரி ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், செப்.1-நாகப்பட்டினம் மாவட்டம் காவிரியின் கடைமடைப் பகுதி யாகும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டா லும் இப்பகுதிகளுக்குத் தண்ணீர் வருவதென்பது அரிது தான். காரணம், ஆண்டுக்கணக்கில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் கிடக்கின்றன. நீர்த் திறப்பு மதகுகள் சீரற்றுக் கிடக்கின்றன. முப்போகம் விளைந்த பூமியில் தற்போது குறுவைச் சாகுபடி என்பது அரிதாகி விட்டது. சம்பாப் பயிரையும் காப்பாற்றிட வழியில்லாமல் விவசாயி கள் தவிக்கிறார்கள். எனவே, கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வர வேண்டுமானால் மேட்டூர் அணையில் அதிக நீர் திறந்து விடப்பட வேண்டும். 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டால் தான் இப்பகுதிகளுக்குச் சிறிதளவாவது தண்ணீர் வரும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் நாகை மாவட்ட ஒன்றியப் பகுதி களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகைக் கடைத்தெருவில், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கி..கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். சி.பி.எம்.கீழையூர் ஒன்றியச் செயலா ளர் எம்.முருகையன், வி.ச.மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.பால்சாமி, ஏ.ராமலிங்கம், சி.பி.எம்.ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஏ.முருகையன், என்.பன்னீர்செல்வம், பி.ராமலிங்கம், எம்.ரவி, தன்ராஜ், இ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.