சீர்காழி, ஜூலை 19- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டத்தில் பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்ட த்தின் முனைப்பு இயக்கத்தை மாநில வேளா ண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கொள்ளிடத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயலை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் ஆயில் என்ஜின், நெ ல்விதை மூட்டை, நுண்ணீர் தெளிப்பான், உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூ ட்டங்களை வழங்கினார். கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயப்பிரகாஷ், விவசாயிகள் சார்பில் வேளாண் இயக்குநரிடம் மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், கடைமடை பகுதிக்கு இதுவரை பாசன த்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கொள்ளி டம் வட்டாரத்தில் 5 ஆயிரம் ஹெக்டேர் நில ப்பரப்பில் குறுவை நெல்பயிர் சாகுபடி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் வந்து சேராத தால் 4 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி செய்வதே சிரமம். எனவே தண்ணீர் வந்து சேர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதற்கு பதி லளித்த வேளாண்மை இயக்குநர், அது குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாக கூறினார்.