tamilnadu

மயிலாடுதுறை புதிய மாவட்டம் பிரிப்பு: ஜூலை 30-ல் பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள்

நாகப்பட்டினம்,  ஜூலை 22 - தமிழக முதல்வர், நாக ப்பட்டினம் மாவட்ட த்தைப் பிரித்து, மயிலாடு துறையைத் தலைமை இட மாகக் கொண்டு ஒரு  புதிய மாவட்டம் தோற்று விக்கப்படும் என அறி வித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசின் முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தலை மையில் ஜூலை 30 அன்று,  நாகப்பட்டினம் மற்றும் மயி லாடுதுறையில் பொதுக் கரு த்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெறும். நாகப்பட்டினம், இ.ஜி. எஸ்.பிள்ளை பொறியி யல் கல்லூரிக் கலை யரங்கத்தில், ஜூலை 30, நண்பகல் 12 மணிமுதல், பிற்பகல் 1.30 மணி வரையும், மயிலாடுதுறை ஏ.வி. சி.கலைக்கல்லூரி, வேலாயு தம் அரங்கில் ஜூலை 30, பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 மணி வரை பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும்.

இந்த இரு கூட்டங்க ளிலும் நாடாளுமன்ற உறு ப்பினர்கள், மாநிலங்கள் அவை உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகள், வணிக அமைப்புகள், தன்னா ர்வத் தொண்டு நிறுவ னங்கள் மற்றும் அந்தந்தக்  கோட்டங்களின் தன்னா ர்வலர்கள் பங்கேற்பார்கள். மேற்படிப் பொதுக் கருத்துக் கேட்புக் கூட்ட த்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்துப் புதிய மயிலாடுதுறை மாவ ட்டம் அமைப்பது தொட ர்பான கருத்துக்களைப் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று தங்களது கரு த்துக்களைத் தெரிவிக்க லாம். மேலும், கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, தனிமனித இடை வெளியை கடைபிடிப்ப தற்காக, மாவட்டம் பிரித்தல்  தொடர்பான தங்கள் கருத்துக்களைப் பொது மக்கள் எழுத்துப் பூர்வ மாக அளித்திடும் வண்ணம்,  கருத்துக் கேட்பு கூட்ட வாயிலின் முன்பாக வைக்க ப்படும் பெட்டியில் மனு க்களைச் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என  நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரி வித்துள்ளார்.