தரங்கம்பாடி, ஆக.14- நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, மாணிக்கப்பங்கு, குட்டியாண்டூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை சந்தித்து நன்றி கூறினார். சந்திரபாடி கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார்களை சந்தி த்து நன்றி கூறிய போது, கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சாலை வசதிகள் முறையாக இல்லை என்றும் அதனை சரி செய்து தருமாறு கோரிக்கை மனு வை எம்.பி. யிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது திமுக மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா.முருகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மீனவ மக்கள் உடனி ருந்தனர்.