சீர்காழி, ஆக.6- கொள்ளிடம் அருகே உப்பங் காடு செல்லும் தார்ச் சாலையை மேம் படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்திலிருந்து உப்பங் காடு கிராமத்துக்குச் செல்லும் இரண்டு கிலோ மீட்டர் தூர தார் சாலை மேம்படுத்தப்பட்டு 10 வருடம் ஆகிறது. அன்றிலிருந்து இன்று வரை இந்த சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உப்பங்காடு கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்க ளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை புத்தூர், கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதிகளுக்கு வருவதற்கு மிக வும் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் டயரை கிழித்து விடுகிறது. இதனால் மாண வர்கள் அவதியை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் விளைநிலங்களுக்கு இந்த சாலையில் செல்லும் போது தடுமாறு கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே 10 ஆண்டுகளாக மேம்படுத்தாத உப்பங்காடு செல்லும் 2 கிலோ மீட்டர் தூர தார் சாலையை மேம்படுத்த கிராம பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.