tamilnadu

img

வெட்டிவேர் சாகுபடி நிலம்  பீட்ரூட் பயிருக்கு ஏற்றது  வேளாண் மாணவிகள் விளக்கம்

 சீர்காழி, ஆக.5- கொள்ளிடம் அருகே தில்லைமங்களம் கிராமத்தில் வெட்டிவேர் சாகுபடிக்கு ஏற்ற இடம் பீட்ரூட் பயிரிட ஏற்றதாக இருப்பதாக பீட்ரூட் விதையை விதைத்து வேளாண் மாணவிகள் தெரிவித்தனர்.  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்க ணாம்பட்டு கிராமத்தில் அ.ம.ப.கழக வேளாண் இறுதி யாண்டு மாணவிகள் கடந்த மூன்று வாரங்களாக தங்கி விவ சாயிகளுடன் இணைந்து பல்வேறு தொழில்நுட்பங்களை செய்முறை பயிற்சியாக செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருபுவனவீரமங்கலம் கிரா மத்தில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது நிலத்தில் முதன் முறையாக வேளாண் விரிவாக்கத் துறை பேராசிரியர் சண்முகராஜ் மேற்பார்வையில் பீட்ரூட் விதை விதைப்பு செய்து காட்டினார். பயிற்சியில் புதுமையை புகுத்தும் வகையில் கொள்ளிடம் பகுதியில் பயிரிடப்படாத பீட்ரூட்டை பயிருக்கான விதைப்பு செய்து காட்டினர்.  இது குறித்து மாணவிகள் கூறுகையில், திருபுவன வீரமங்கலம் கிராமம் வெட்டிவேர் சாகுபடிக்கு ஏற்ற உகந்த இடமாகும். வெட்டிவேர் சாகுபடி அபூர்வமாக ஏதாவது சில இடங்களில் மட்டுமே செய்ய முடியும் அதற்கேற்ற மண்வளம் இக்கிராமத்தில் மட்டுமே உள்ளது. அதே மண் பீட்ரூட் சாகுபடிக்கு ஏற்றது. எனவே இங்கு பீட்ரூட் சாகுபடி செய்ய முதன் முதலில் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.  மேலும் அதிக லாபம் தரும் வகையில் 70 முதல் 80 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும் பீட்ரூட் பயிரில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. தண்ணீர் தேங்கி நிற்காமல் உடன் நீரை உறிஞ்சும் தன்மை இக்கிரா மத்தின் மண்ணுக்கு மட்டுமே உண்டு என்றனர். கொள்ளிடம் அக்ரோ சென்டர் உரிமையாளர் ராமநாதன், மாணவிகள் குழுத்தலைவி நிஷா, துணைத்தலைவி ஓவியா மற்றும் மாணவிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.