tamilnadu

img

கடும் வறட்சியின் பிடியில் கோடியக்கரை சரணாலயம்

நாகப்பட்டினம், மே16-நாகை மாவட்டம், வேதாரணியத் திற்குத் தெற்கே, வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள கோடியக்கரை வன விலங்குச் சரணாலயம் புகழ்பெற்றது. இங்குள்ள பல அரிய விலங்குகளைக் காண்பதற்கு தினமும் ஏராளமான மக்கள் வருகை தருவார்கள். கோடியக்கரை வனவிலங்குச் சரணாலயம், 23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த பசுமைக் காடாகும். இந்தச் சரணாலயத்தில் 2000 க்கு மேற்பட்ட புள்ளிமான்கள், வெளிமான்கள், கலைமான்கள், காட்டு எருமைகள் எனஏராளமான விலங்குகள் உள்ளன. இந்நிலையில் இந்தச் சரணாலயம் கஜா புயலில் பாதிக்கப்பட்டுச் சிதைந்து விட்டது. பலவகை அரிய விலங்குகள், பெரும்பான்மையான மான்கள் புயலிலும், கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டும் மாண்டுபோயின. இதன்பின்சரணாலயம் ஓரளவு புனரமைக் கப்பட்டது. ஆனாலும் மக்கள் வருகைமிகவும் குறைந்து போனது. மேலும்இங்கு கடுமையான வறட்சி நிலவு கிறது. சரணாலயத்தைக் காண்பதற்காக வருகை தரும் சுற்றுலாப் பயணி களுக்கு எவ்விதமான வசதிகளும் இங்குஇல்லை. தண்ணீரிலிருந்து உணவு வரைவருகின்றவர்கள் தான் கொண்டு வர வேண்டும். வனத்தைச் சுற்றிப்பார்க்க எந்த வசதியும் இல்லை. தற்போதுள்ள முக்கிய பிரச்சனை மிச்சமுள்ள வன விலங்குகளைப் பாதுகாப்பது. இந்த வனத்தில் 56 இடங்களில் இயற்கை குளங்களும் மற்றும் சிமெண்டால் கட்டப்பட்ட 17 தண்ணீர்த் தொட்டிகளும் உள்ளன. மழை இல்லாததாலும், கடுமையான வறட்சி நிலவுவதாலும், தண்ணீர் இன்றியும் விலங்குகள் இறக்கின்றன. தற்போது, வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டிகளில் தினமும் 15 ஆயிரம்லிட்டர் தண்ணீர், வெளிப் பகுதிகளி லிருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டுத் தண்ணீர்த் தொட்டிகளில் நிரப்பப்பட்டு விலங்குகளுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.