சீர்காழி, நவ.19- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுத்தம் செய்யாததால் இளைஞர்களே முன்வந்து சுத்தம் செய்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடிக்கும் கடலூர் மாவட்டம் வல்லம்படு கைக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் இந்தப் பாலத்தின் வழியே போக்குவரத்து துவங்கியது. சென் னையிலிருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி மார்க்க மாக கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் இந்த பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்க ளுக்கும் மேலாக இப்பாலம் முறையாக பரா மரிக்கப்படவில்லை. இதனால் பாலத்தின் இரு புறங்களிலும் புதர் மண்டி காணப்படு கிறது. மின்விளக்குகள் பராமரிக்கப்பட வில்லை. இரவு நேரங்களில் இருண்டே கிடக்கி றது. மண் படிந்துள்ளதால், பாலத்தில் தேங்கும் நீரை வெளியேற்றும் அனைத்து குழாய்களும் அடைபட்டுள்ளன. இதனால் மழை நீர் சாலையின் இருபுறங்களிலும் தேங்கி நிற்கிறது. தண்ணீர் பாலத்தில் தேங்கியே நிற்பதால் எளிதில் பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எனவே பாலத்தை சரி செய்யவும், சுத்தம் செய்யவும், முறைப்படி பராமரிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்தும் கடந்த இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக பாலத்தை பராமரிக்க வில்லை. எனவே பொதுமக்கள் சார்பில் வல்லம் படுகையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பொறியாளர் ரமேஷ் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட இளைஞர் கள் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை உரிய கருவிகளுடன் வந்து பாலத்தை சுத்தம் செய்தனர். பாலத்தில் குவிந்த கிடந்த மண்ணை அகற்றி தண்ணீர் வெளியேறும் குழாய்க ளில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை அகற்றி னர். தொடர்ந்து 4 மணி நேரம் இளைஞர்கள் இந்தப் பாலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து பொறியாளர் ரமேஷ் கூறுகையில், பாலத்தை தேசிய நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் முறைப்படி பரா மரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.