tamilnadu

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டி

தரங்கம்பாடி, டிச.18- நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 10 வது மாவட்ட ஊராட்சி  கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் மாதர் சங்க வட்டச் செயலாளர் ராணி போட்டியிடுகிறார். இவரது கணவர் டி.ராசையன் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே இலுப்பூர் ஊராட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார்.                                         செம்பனார்கோவில் ஒன்றியத்தில் திரு விளையாட்டம் 23 வது வார்டு கவுன்சிலர்  பதவிக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தரங்கம்பாடி வட்டச் செயலா ளருமான பி.சீனிவாசன் போட்டியிடுகிறார். பிள்ளைப் பெருமாநல்லூர் ஒன்றிய கவுன்சி லர் பதவிக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், மாதர் சங்க மாநில துணைத் தலைவருமான ஜி.கலைச்செல்வி போட்டி யிடுகிறார். இவர் ஏற்கனவே ஒன்றிய கவுன்சி லராக வெற்றி பெற்றவர்.    கீழையூர் 4 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் வட்டக்குழு உறுப்பினரும், வாலிபர் சங்க வட்டச் செய லாளருமான கே.பி.மார்க்ஸ் போட்டியிடு கிறார். நரசிங்கநத்தம் 21 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.தம்புசாமி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றவர். திருக்கடையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் வட்டத் தலைவர் ஜி.இளையராஜா போட்டியிடுகிறார். இலுப்பூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆர்.சாந்தி போட்டியிடுகிறார்.