tamilnadu

img

செம்பனார்கோவிலில் சிபிஎம் அரசியல் வகுப்பு 

தரங்கம்பாடி, ஜூன் 3-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வகுப்பு நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் வியாழனன்று துவங்கி 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் வகுப்பில் மார்க்சிய தத்துவம் என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினரும், எழுத்தாளரும், மார்க்சிய அறிஞருமான எஸ்.ஏ.பெருமாள், கட்சி திட்டம் என்ற தலைப்பில் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கட்சியும்வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களும் என்ற தலைப்பில் கட்சியின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி ஆகியோர் பேசினர். 2-வது நாளான வெள்ளியன்று மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற தலைப்பில் எஸ்.விவேகானந்தன், இடது ஜனநாயக அணி என்ற தலைப்பில் கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர்வகுப்பு நடத்தினர்.  கட்சியின் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற வகுப்பில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் பகுதிகளை சேர்ந்த கட்சி கிளை செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.