தரங்கம்பாடி, ஆக.22- நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள காழியப்ப நல்லூர் ஊராட்சி கண்ணப்பமூலை பகுதியில் மகிமலை ஆற்றில் தூர்வாரப்படும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பிரதீப்குமார் வியாழனன்று நேரில் ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர்கள் பவானி, சண்முகம், வீரப்பன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட னிருந்தனர். காழியப்பநல்லூர், அனந்தமங்கலம் உள்ளிட்ட பகுதி களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன ஆறாகவும்,வெள்ளக்காலங்களில் வடிகால் ஆறாக வும் உள்ள மகிமலையாறு கடந்த பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்து வந்தது. விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 35 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்படுகிறது. பல ஆண்டு களுக்கு பிறகு மகிமலையாறு தூர்வாரப்படுவதற்கு நன்றி தெரிவித்துள்ள விவசாயிகள் கிளை வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.