தரங்கம்பாடி, பிப்.24- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி பூம்புகார் தொகுதி முழுவதும் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ பவுன்ராஜ் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் திங்களன்று நடைபெற்றன. செம்பனார்கோவிலில் உள்ள பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் சீருடைகளையும் எம்.எல்.ஏ வழங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் க.சீனுவாசன், மேற்பார்வையாளர் சுப்ரமணியன், தலைமையாசிரியை ரேவதி, வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தராஜன், முன்னாள் எம்.எல்.ஏ விஜயபாலன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பரசலூர் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.