tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

தரங்கம்பாடி, டிச.22- நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் வெள்ளியன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  மாவட்டக்குழு உறுப்பினர் பதவிக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடும் ராணி இராசையன், ஒன்றி யக்குழு உறுப்பினர் பதவிக்கு கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன் (திரு விளையாட்டம்), சாந்தி(இலுப்பூர்), திரு விளையாட்டம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கைஉருளை சின்னத்தில் போட்டியிடும் மாதர் சங்க மாவட்டத்தலைவர் ஜி.வெண் ணிலா, கொத்தங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏணி சின்னத்தில் போட்டியிடும் கட்சி கிளை செயலாளரும், விவசாய சங்க வட்டத் தலைவருமான என்.சந்திரமோகன் உள்ளிட்டோர். இலுப்பூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிடும் கட்சி உறுப்பினர் ஆசிக் ரஹ்மான், எடுத்துக்கட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு கைஉருளை சின்னத்தில் போட்டியிடும் கட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகியோருக்கு வாக்கு கேட்டு எடுத்துக்கட்டி, இலுப்பூர், கொத்தங்குடி, வேலம்புதுக்குடி, திருவிளையாட்டம் ஆகிய பகுதிகளில் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான நாகை மாலி ஆகி யோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அனைத்து பகுதிகளிலும் மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

;