சீர்காழி, அக்.29- சீர்காழி அருகே குன்னம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே குன்னம் கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் மூலம் விவசாயிகள் சம்பா நடவு பயிருக்கு பயன் படுத்திக் கொள்ள டி.ஏ.பி யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்களை வாங்கி இடுவதற்கு காத்திருந்த னர். ஆனால் கூட்டுறவு சங்கத் தின் மூலம் மானியத்தில் விவ சாயிகளுக்காக ஒதுக்கீடு செய் யப்பட்ட உரங்கள் என்ன ஆனது எங்கே போனது என்று தெரிய வில்லை. மானிய விலையில் குறைந்த விலைக்கே வாங்கி உரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த விவசாயிகள் தற்பொழுது ஏமாற்றத்தில் உள்ள னர். தனியார் உரக்கடைகளில் அதிக விலை கொடுத்து உரங்க ளை விவசாயிகள் வாங்கி பயன் படுத்தி வருகின்றனர். குன்னம், பெரம்பூர், கீழ மாத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயி கள் சம்பா நேரடி விதைப்பு பயிர் சம்பா நடவு பயிர் செய்யும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில் குன்னம் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மானிய விலை யில் உரம் கிடைக்காமல் விவசாயி கள் அவதியடைந்து வருகின்ற னர். இது குறித்து குன்னம் மற்றும் சுற்றுபுற கிராம விவசாயிகள் கூறுகையில், குன்னம் தொடக்க வேளாண்மைக் கூட்றவு வங்கி க்கு விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மானிய விலை ரசாயன உரங்கள் குன்னம் கூட்டு றவு வங்கிக் குடோனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்ததா கக் கூறப்படுகிறது. அந்த உரங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை இது குறித்து குன்னம் கூட்டுறவு வங்கி செயலாளரை அணுகி கேட்கலாம் என்று வங்கி க்கு நேரில் சென்றால் கூட்டுறவு வங்கியில் வங்கி செயலாளரை பார்க்க முடியவில்லை. அலுவ லக நேரத்தில் வங்கி செயலாளர் வருவது இல்லை. மேலும் குன்னம் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு வங்கியின் கட்டுப் பாட்டுக்குள் குன்னம் கீழமாத் தூர், பெரம்பூர், வடரெங்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் அரிசி கடைகளில் அரிசி, மண்எண்ணெய், சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொ ருட்கள் நுகர்வோருக்கு உரிய அள வில் கிடைப்பதில்லை. இதனால் நுகர்வோர்கள் அவதியடைகின்ற னர். எனவே விவசாயிகள், நுகர் வோர் நலன் கருதி, அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும், விவசாயிகளுக் காக ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை எளிதில் கிடைக்கச் செய்யவும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.