tamilnadu

img

தீபாவளி போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, அக்.19- நாகை ஒக்கூர் என்பிபிஎல் மின் உற்பத்தி நிலைய ஊழியர்க ளுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் மற்றும் அட்வான்ஸ் தொகையை உடனடியாக வழங்கிட கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு), தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. தொமுச அமைப்பு சாரா சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.எஸ். ஸ்ரீதர் தலைமையில் சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவா,மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத்தலைவர் எஸ்.சிவராஜன்,திட்ட செயலா ளர் எம்.கலைச்செல்வன், சிஐடியு சங்கத்தை சேர்ந்த அண்ணாத் துரை,சிந்தனையழகன்,மோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் இரு சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.