நாகப்பட்டினம், அக்.29- நாகப்பட்டினம் மாவட்ட நிர்வா கம் சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப் புணர்வு மற்றும் சுகாதாரம் தொ டர்பான தூய்மைப் பணிகள் குறித்துப் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களி லும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்புப் பகுதிகள், தெரு வோரங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, தண்ணீர் தேங்க விடாமல் தூய்மைப் பணிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்டக் கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி) எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உடனிருந்தனர்.