tamilnadu

img

தோழர் ஆர்.முத்துப்பெருமாள் காலமானார்

நாகப்பட்டினம், ஜூலை31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர், சோழவித்தியாபுரம் தோழர் ஆர். முத்துப்பெருமாள், 31.7.2019, புதன் கிழமை மதியம்-2  மணிக்குத் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது-68. தோழர் ஆர்.முத்துப்பெருமாள், நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், சோழவித்தியாபுரத்தைச் சேர்ந்தவர். உஷா என்னும் மனைவியும் ராஜ கோபாலன் என்னும் மகனும், குருஷ் கயா என்னும் மகளும் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் கீழையூர் ஒன்றியச் செயலாளர், கடலோரப் பிரதேசக் குழுச் செயலா ளர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பணிகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். சோழவித்தியாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணி யாற்றிய காலத்தில் பண்ணையா ளர்கள் மூலம் பெற்ற பண்ணை நிலத் தில், நிலமற்ற ஏழை எளிய, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலத்தைப் பகிர்ந்தளித்தவர். வீடு இல்லாத தலித் மற்றும் ஏழை மக்களுக்கு அரசு உதவி யின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுத்த வர். பாலக்குறிச்சி தொடக்க வேளா ண்மைக் கூட்டுறவுக் கடன் வங்கி யின் துணைத் தலைவராகப் பணி யாற்றியபோது, விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தாமதமின்றிக் கடன்களும் பல்வேறு உதவிகளும் வங்கியின் மூலம் செய்து கொடுத்தார். சி.பி.எம். கட்சியையும் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கத்தையும் பல்வேறு பகுதி களில்  வளர்ப்பதற்கு அல்லும் பகலு மாகப் பாடுபட்டவர். இயக்கங்களின் போராட்டக் களங்களில் முன்னணி வீரராக நின்று பல போராட்டங்களை நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியபோது, கடந்த ஜூன் -6 அன்று, தனது இருச்சக்கர(பைக்) வாக னத்தில், வேளாங்கண்ணி-வேதாரணி யம் சாலையில் பூவத்தடி என்னும் இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதிய விபத்தில் பலத்த காயமுற்றுத் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, உயர் சிகிச்சை அளிக்கப்பட்டும் இறுதிவரை நினைவு திரும்பாமலேயே, புதன் மதியம் தஞ்சை மருத்துவ மனையிலேயே காலமானார். அவரது உடல் வியாழன் அன்று சோழவித்தியாபுரம் அவரது இல் லத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. ஆகஸ்ட்-2, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம், சோழவித்தியாபுரம் அவ ரது இல்லத்திலிருந்து புறப்படுகிறது. இதில் சி.பி.எம். தலைவர்கள், பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள்,  ஊர் மக்கள் கலந்துகொள்கிறார்கள். தகவல் அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட் டோர் இரங்கற்செய்தி அனுப்பி யுள்ளனர்.