tamilnadu

img

கீழையூர்- வாழக்கரை தோழர் பி.வைரன் நினைவுநாள்

நாகப்பட்டினம், செப்.19- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றி யம் வாழக்கரை எனும் சிற்றூரில் பிறந்த வர் பி.வைரன். பி.வி. என அனைவரா லும் அன்போடு அழைக்கப்பட்டவர். அவரது ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, அவரது சொந்த ஊரான வாழக் கரையில் புதனன்று நடைபெற்றது. தோழர் பி.வைரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகப் பணி யாற்றி இயக்கத்தின் முன்னணித் தலை வர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கீழை யூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவ ராக 5 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும், தலித் மக்களுக்கும், விவசாயத் தொழி லாளர்களுக்கும் பல்வேறு நலன் களைச் செய்தவர். சிபிஎம், விவசாயிகள் சங்கம், விவ சாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் வெகுஜன இயக்கங்களின் பல்வேறு போராட்டங்களில் முன்னணிக் களப் போராளியாகத் திகழ்ந்தவர். அவரது ஓராண்டு நினைவு தின நிகழ்ச்சிக்கு, சிபிஎம் கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, தோழர் பி.வைரன் உரு வப் படத்திற்கு மாலை அணிவித்து, மறைந்த தோழரின் சேவைகளையும் அரும்பணிகளையும் நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் த.லதா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அப்துல்அஜீஸ், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.டி.எம்.சுஜாதா, மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என்.பன்னீர்செல் வம், சிஐடியு மாவட்டத் துணைத் தலை வர் கே.தங்கமணி, தமுஎகச ஒன்றியச் செயலாளர் கே.டி.முருகையன், வாலி பர் சங்க ஒன்றியச் செயலாளர் பி. விஜயேந்திரன்,  ஏ.முருகையன், பி.ராம லிங்கம், ஏ.எம்.நாகராஜன், என்.வைத்திலிங்கம், எஸ்.அன்பழகன் உள்ளிட்டோர் புகழுரையாற்றினர்.