மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள சீதைசிந்தாமணி என்கிற குக்கிராமத்தை சேர்ந்தவர் ஓவிய கல்லூரி மாணவர் ராதா(எ)இராதாகிருஷ்ணன். இவர் கீழவெண்மணி தியாகிகளின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக 1 அடி உயரத்தில் சுடுமண் சிற்பத்தை வடித்துள்ளார். இவர் கும்பகோணம் அரசு கவின்கலை கல்லூரியில் முதுகலை சிற்பக்கலை படித்தவர்.வெண்மணி தியாகிகளின் 50-வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியின் போதும் இதுபோன்று சுடுமண் சிற்பத்தை வடிவமைத்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் அளித்து பாராட்டைப் பெற்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குடும்பத்தில் பிறந்த இராதாகிருஷ்ணனின் சகோதரர்கள் 5 பேரும் ஓவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.