tamilnadu

img

இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிறந்த நாள் விழா

தரங்கம்பாடி, அக்.12- இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதியும், முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவருமான மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் 193 ஆவது பிறந்த நாள் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி வெள்ளி யன்று நடைபெற்றது.    விழாவிற்கு மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெனிபர் ச.பவுல்ராஜ் தலைமை வகித்தார். சிறப்புத் தலைவர் சு.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். தருமை ஆதினக் கலைக்கல்லூரி பேராசிரியை பா.முத்துலட்சுமி சிறப்புரை யாற்றினார். பேராசிரியர்கள் வன்மீக வெங்க டாசலம், துரை.குணசேகர், திருக்குறள் பேர வையின் தலைவர் முனைவர் சு.சிவசங்க ரன், வரலாற்றுப் புதின எழுத்தாளர் மலர்விழி கலியபெருமாள், ஏ.வி.சி கல்லூரியின் தமி ழாய்வுத் துறை தலைவர்  சு.தமிழ்வேலு, உலக தமிழ்க் கழக தலைவர் சிவ.கோபால கிருஷ்ணன் ஆகியோர் கவிஞர் வேதநாய கம் பிள்ளை போற்றி புகழுரையாற்றி னார்கள். கவிஞர் விமலா நாகேஷ் கவிதை வாசித்தார். மாயூரம் கவிஞர் வேதநாயகம் பிள்ளை யின் பேரன் கடலூர் வழக்கறிஞர் பிரதீப் வேதநாயகத்திற்கு சிறப்பு செய்யப்பட்டது. கவிஞர் வேதநாயகம் பிள்ளை சம்மந்தி டி.ஆர்.பால்இருதயராஜ் வாழ்த்து செய்தி யினை இள.மதுராந்தகன் வாசித்தார். நிகழ்ச்சிகளை க.சிவசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். கவிஞர் கடலூர் பாலா வரவேற்றார். பொள்ளாச்சி கவிஞர் இன்பரசு நன்றி கூறினார்.  11/10/1826-ல் பிறந்த வேதநாயகம் பிள்ளை தமிழ், ஆங்கிலம் இருமொழிகளி லும் புலமை பெற்றவர். தரங்கம்பாடியில் இருந்த உரிமையியல் நீதிமன்றத்தில் 1857 ல் தனது 31 ஆவது வயதில் நீதிபதியாக பணியமர்ந்தார். 1858 ல் சீர்காழிக்கு மாற்ற லாகி, 1860 ல் மயிலாடுதுறை நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டு இறுதி நாள் வரை அங்கேயே வாழ்ந்தார்.  பிரிட்டிஷ்காரர்களின் கீழ் பணியாற்றி னாலும் நான் ஒன்றும் அவர்களுக்கு அடிமை இல்லை என வாழ்ந்தவர். தன்மானம் தான் பெரிது என பணியை உதறினாலும் ஆங்கிலேயர்களாலேயே கவரப்பட்ட அறிவுத் திறன் கொண்டவராக பணி யாற்றினார். கவிஞர், எழுத்தாளர், மயிலாடு துறையின் முதல் நகர்மன்ற தலைவர் என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரரான வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி என்கிற நாவல்கள் பெண் கல்வி, பெண் மானம், பெண்மதி மாலை ,பொம்மை கல்யாணம், திருவருள் மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, சர்வ சமய கீர்த்தனைகள், 1850-61 வரையிலான முக்கிய தீர்ப்புகள் அடங்கிய நூல்கள் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.  இலக்கியங்களிலும், கவிதைகளிலும் பெண்கல்வி குறித்தும், பெண் அடி மைத்தனத்திற்கு எதிராகவும் எழுதியவர். 1876-78 களில் ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சத்தின் போது தனது பெரும் சொத்தை விற்று மயிலாடுதுறையில் பல இடங்களில் கஞ்சித் தொட்டிகளை அமைத்து மக்கள் பசியை போக்கினார். 1873 ல் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப் பட்டார். பெண்களுக்கான முதல் கல்விக் கூடத்தை ஏற்படுத்தி சாதித்து காட்டியவர். மக்கள் தலைவனாக, நீதியரசராக, இலக்கிய மேதையாக, மறுமலர்ச்சி கவிஞராக வாழ்ந்த அவர் இறந்த பிறகு அவர் புதைக்கப்பட்ட இடத்திலேயே அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.  கடும் பஞ்சத்தின் போது மக்கள் பசி தீர்த்த மகத்தான மனிதரின் புகழை பறைசாற்றும் வகையில் மயிலாடுதுறையில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், அவர் பணியாற்றிய மயிலாடுதுறை நீதி மன்றத்தில் சிலை வைத்து மரியாதை செய்வ தோடு, அவரது பிறந்த, இறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென மயிலாடுதுறை பகுதி மக்கள் விரும்பு கின்றனர். அரசு நடவடிக்கை எடுக்குமா?